காயங்களுடன் நிர்வாண நிலையில் கிடந்த ஆண் சடலத்தால் பரபரப்பு
திருச்சி, ஏப்.12 திருச்சி மாவட்டம், மணப்பாறை அடுத்த கே.பெரியப்பட்டி பிரிவு சாலையில் திண்டுக்கல் திருச்சி தேசிய நெடுஞ்சாலை அருகே இன்று காலை சுமார் 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் உடலில் காயங்களுடன் வயிற்றில் ஒரு பகுதியில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தன் அடையாளமாக மருத்துவகுழாய் பொருத்தப்பட்டிருந்த நிலையில் நிர்வாண கோலத்தில் பிணமாகக் கிடந்தார். தகவலின் பெயரில் மணப்பாறை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.