போதைப் பொருள் எதிர்ப்பு தினத்தையொட்டி விழிப்புணர்வு பேரணி
திருச்சி, ஜுன் 26 சர்வதேச போதைப் பொருள் எதிர்ப்பு தினத்தையொட்டி மதுவிலக்குப் மற்றும் ஆயத்தீர்வை துறை சார்பில் திருச்சி ஜமால் கல்லுரியில் போதைப் பொருள் எதிர்ப்பு மற்றும் கடத்தலுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் கொடியசைத்து தொடங்கி வைத்தா. உடன் கோட்டாட்சியர் தவச்செல்வம், உதவி ஆணையர் கலால் ரெங்கசாமி, அலுவலக மேலாளர் கலால் கருணாநிதி, தனலட்சுமி, சந்திரகுமார், வட்டாட்சியர்கள், அரசு அலுவலர்கள், ஜமால் கல்லூரி முதல்வர், பேராசிரியர்கள் மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.