43-வது வார்டை சுத்தம் செய்யும் பணியில் கவுன்சிலர் ந.செந்தில்!
திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளரும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் வழிகாட்டுதலின்படி திருச்சி மாநகராட்சியின் 43-வது வார்டில் பர்மா காலனி பூங்காவை சுத்தம் செய்தல், குறிஞ்சி நகர் பகுதிகளில்

சாக்கடையை சுத்தம் செய்தல் மற்றும் குப்பைகளை அகற்றும் பணிகளை மாமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் ந.செந்தில் பார்வையிட்டு மாநகராட்சி ஊழியர்களை வைத்து பணிகள் மேற்கொண்டார். இதில் வட்டக் கழகப் பொறுப்பாளர் முருகானந்தம், கழக நிர்வாகிகள், மாநகராட்சி ஊழியர்கள் கலந்து கொண்டனர்.