உரவிலை உயர்வை கண்டித்து விவசாயிகள் தர்ணா போராட்டம்; விவசாயிகளுக்கும், போலீசாருக்குமிடையே தள்ளுமுள்ளு!
உர விலை உயர்த்தப்பட்டதை கண்டித்தும், விவசாயிகளுக்கு லாபகரமான விலை வழங்க வலியுறுத்தியும் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக வாசலில் அமர்ந்து தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில்

விவசாயிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ஆட்சியர் அலுவலக கதவை மூட முயன்ற விவசாயிகளுக்கும், போலீசாருக்குமிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் அய்யாக்கண்ணு உள்ளிட்ட விவசாயிகளை காவல் துறையினர் குண்டுக்கட்டாக தூக்கி கைது செய்தனர்.