மனித நேய மக்கள் கட்சி வேட்பாளர் ச.மரியம்பீவி தெருமுனை பிரச்சாரம்
திருச்சி மாவட்டம், மணப்பாறை நகராட்சி 21வது வார்டு நகர்மன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் போட்டியிடும் மனித நேய மக்கள் கட்சி வேட்பாளர் ச.மரியம்பீவி கம்யூனிஸ்ட் கட்சி கலை குழுவினருடன் தெருமுனை பிரச்சாரம் செய்தார். அப்போது தி.மு.க. ஆட்சியின் சாதனைகளை பொதுமக்களிடம் எடுத்துக்கூறி வாக்கு சேகரித்தார்.
அப்போது ம.ம.க. நகர தலைவர் அக்பர் பாட்ஷா, திமுக வட்ட செயலாளர் வெற்றி செல்வன் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.