தி.மு.க.வினர் பூத்சிலிப் வழங்கும் இடத்தில் அமைச்சர் ஆய்வு
திருச்சி மாவட்டம், மணப்பாறை மற்றும் பேரூராட்சி உள்ளாட்சித்தேர்தல் இன்று காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெறுகிறது. இந்த நிலையில் மணப்பாறையில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி மையத்திற்கு அருகே அமைக்கப்பட்டு இருக்கும் தி.மு.க.வினர் பூத்சிலிப் வழங்கும் இடத்திற்கு சென்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேரில் பார்வையிட்டு, திமுக கூட்டணி கட்சி நிர்வாகிகளிடம் வாக்கு பதிவுகள் பற்றி கேட்டறிந்தார்.