அரசு பள்ளியில் தேசிய அறிவியல் தின கொண்டாட்டம்
திருச்சி பீமநகரில் உள்ள மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் தேசிய அறிவியல் தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதில் திருச்சி மாவட்டக்கல்வி அலுவலர் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார். தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு அறிவியல் திறனறித்தேர்வு, அறிவியல் கண்காட்சி மற்றும் சர்.சி.வி.இராமன் முகமூடி அணிந்து மாணவர்கள் அறிவியல் தின உறதிமொழி எடுத்தனர். தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் உறுப்பினர்கள் கலந்துகொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.
