தேர்தலுக்கான முன்னேற்பாடுப்பணிகள் குறித்து ஆய்வுக்கூட்டம்
திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில், திருச்சிராப்பள்ளி மண்டலத்திலுள்ள திருச்சிராப்பள்ளி, அரியலூர், பெரம்பலூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் உள்ள 30 பேரூராட்சிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப்பணிகளின் முன்னேற்றம், வெள்ளத் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் டெங்கு, கொரோனா தடுப்பு நடவடிக்கைகள், தேர்தலுக்கான முன்னேற்பாடுப்பணிகள் ஆகியன குறித்து ஆய்வுக்கூட்டம் பேரூராட்சிகளின் ஆணையர் டாக்டர்.இரா.செல்வராஜ் தலைமையில் இன்று நடைபெற்றது.
இக்கூட்டத்தில் பேரூராட்சிகளின் இணை இயக்குனர் மலையமான் திருமுடிக்காரி, உதவி இயக்குனர் காளியப்பன் மற்றும் அனைத்துப் பேரூராட்சிகளின் செயல் அலுவலர்கள், செயற்பொறியாளர் உள்ளிட்ட பொறியாளர்கள் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.