கையெழுத்து பெறவந்த ஊராட்சி ஒன்றிய பணியாளர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்
வையம்பட்டி ஒன்றியம், முகவனுர் ஊராட்சியில் 2019-2020ம் ஆண்டு கணக்கு குறித்து அப்பகுதி மக்களிடம் விளக்கி கூறி கையெழுத்து பெற ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இருந்து சென்றுள்ளனர். மேலும் அறிக்கை குறித்து மக்களிடம் கையெழுத்திட கூறியதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் ஒன்றிய செயலாளர் அருள்குணசேவியர் உள்ளிட்டோர் அறிக்கை குறித்து விளக்கி கையெழுத்து பெற முன்கூட்டியே அறிவித்திருக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். பின்னர் சம்பவம் பற்றி தகவல் அறிந்த வையம்பட்டி போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனால் கையெழுத்து பெறாமல் ஊராட்சி ஒன்றிய பணியாளர்கள் சென்றனர்.