லால்குடி பகுதியில் நாளை மின் தடை

திருச்சி, ஜுன் 15 திருச்சி மாவட்டம் லால்குடியில் உள்ள எல்.அபிஷேகபுரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் நாளை 16 ஆம் தேதி வெள்ளிக்கிழமையன்று காலை 9:45 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது என…

ஏரியை ஆக்கிரமித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை

திருச்சி, ஜூன் 15 திருச்சி மாவட்டம் லால்குடி அருகே புள்ளம்பாடி ஒன்றியத்தில் உள்ள நெடுங்கூர் தண்ணீர் பந்தலில் பொதுமக்கள் பயன்பாட்டில் உள்ள நெய்குளம் சர்வே எண் 126/2 5.64 ஏக்கரில் உள்ள ஏரியை ஆக்கிரமித்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி…

கோவிலில் தங்கியிருந்த மூதாட்டி திடீரென உயிரிழந்தார்

திருச்சி, ஜுன் 15 திருச்சி மாவட்டம் லால்குடி அருகே அன்பில் மாரியம்மன் கோவிலில் உடல்நிலை சரி இல்லாமல் கோயில் வளாகத்தில் தங்கி இருந்த மூதாட்டி திடீரென உயிரிழந்தார். லால்குடி தேர்முட்டி தெருவைச் சேர்ந்தவர் மாரியம்மா (65). இவருக்கு உடல்நிலை…

ஊராட்சி ஒன்றிய பள்ளியில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

திருச்சி, ஜுன் 15 திருச்சி மாவட்டம், புள்ளம்பாடி ஊராட்சி ஒன்றியம், நெய்குளம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் இன்று நேரில் சென்று பள்ளி வளாகம் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை பார்வையிட்டு வகுப்பறைக்குச் சென்று…

திருச்சி மாநகராட்சியில் கொடுங்செயல் எதிர்ப்பு நாள் உறுதிமொழி ஏற்பு

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மைய அலுவலகத்தில் இன்று15.06.2023 காலை 11 மணிக்கு மாண்புமிகு மேயர் மு. அன்பழகன்  தலைமையில் முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் துணை மேயர் ஜி திவ்யா. மண்டல…

முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு தினம்: விழிப்புணர்வு பேரணி

திருச்சி, ஜுன் 15 திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் தலைமையில் முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு தின உறுதிமொழி ஏற்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து பள்ளி மாணவர்கள்…

ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளியில் மாணவர் சேர்க்கை அதிகரிப்பு

திருச்சி, ஜூன் 15 திருச்சி மாவட்டம், அந்த நல்லூர் ஒன்றியம் கம்பரசம்பேட்டை காலனி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி 27.10.1963ல் தொடங்கப்பட்டது - கடந்த அறுபது ஆண்டுகளில் 40 மாணவர்கள் எண்ணிக்கையை தாண்டாத இப்பள்ளி இந்தாண்டு 11 புதிய மாணவர்கள்…

திருச்சி ஆவின் நிறுவனத்தில் பால்வளத்துறை அமைச்சர் ஆய்வு

திருச்சி, ஜுன் 14 திருச்சி கொட்டப்பட்டு ஆவின் பால்பண்ணை வளாகத்தில் புதிதாக ரூ.5.30 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் ஐஸ்கிரீம் தயாரிக்கும் ஆலை கட்டடத்தின் கட்டுமான பணியினை பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் இன்று நேரில் பார்வையிட்டு…

கராத்தே மாஸ்டரிடம் ரூ. 6 லட்சம் மோசடி

திருச்சி, ஜுன் 14 திருச்சி கே.கே நகர், தங்கையா நகர் 7-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் கராத்தே மாஸ்டரான சங்கர். இவர் கராத்தே, சிலம்பம் பயிற்சி பள்ளி நடத்தி வருகிறார். இந்நிலையில் சோமரசம்பேட்டையை சேர்ந்த சுரேஷ் என்பவர் குறைந்த விலைக்கு வீட்டு…

திருச்சி மத்திய சிறையில் கைதி மயங்கி விழுந்து உயிரிழப்பு

திருச்சி, ஜுன் 14 தஞ்சை மாவட்டம் பேராவூரணி பூக்கொல்லை எம்.ஜி.ஆர்.நகரை சேர்ந்தவர் செல்வராஜ் (60). இவர் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் விற்றதாக கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். சம்பவத்தன்று மத்திய சிறையில்…