நெற்பயிர் அறுவடை செய்த வேளாண்மை கல்லூரி மாணவிகள்!
திருச்சி மாவட்டம், லால்குடி அருகே உள்ள செம்பரை கிராமத்தில் திருச்சி அன்பில் தர்மலிங்கம் வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் பயிலும் நான்காம் ஆண்டு மாணவிகள் தங்களின் ஊரக வேளாண் பணி அனுபவத்திற்காக பல்வேறு களப்பணிகள் செய்து வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக செம்பரை கிராமத்தில் உள்ள விவசாயி மூர்த்தி என்பவரது வயலில் பயிரிடப்பட்டிருந்த பாசுமதி நெற்பயிரினை அறுவடை செய்தனர். இந்நிகழ்வில் அன்பில் தர்மலிங்கம் வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் பயிலும் நான்காம் ஆண்டு மாணவிகள் மற்றும் விவசாயிகள் பங்கேற்றனர்.