திருச்சி காசி விஸ்வநாதர் கோவிலில் களைகட்டும் சூரிய வழிபாடு வைபவம்!

0 388
Stalin trichy visit

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் அடுத்துள்ள கல்லணை ரோடு சர்க்கார் பாளையம் காவிரி தென்கரையில் கரிகால் சோழனால் கட்டப்பட்ட பழமையான காசி விஸ்வநாதர் கோயில் உள்ளது.

இக்கோயிலில் மூலவர் காசி விஸ்வநாதர். இந்த சிவலிங்கத்தின் மீது ஆண்டுதோறும் ஆவணி மாதத்தில் 7,8,9 ஆகிய மூன்று தேதிகளிலும் தொடர்ந்து மூன்று நாட்கள் விடியற்காலை பொழுதில் சூரியனின் கதிர்கள் நேரடியாக படுகின்றன. இந்த நிகழ்வை சூரிய வழிபாடு என்று புராணங்கள் கூறுகின்றன. சிவலிங்கத்தின் மீது சூரிய கிரகணங்கள் படும் நேரத்தில் சிவலிங்கத்தை வழிபடுவது சிறந்த நற்பலன்களை கொடுக்கும் என்ற நம்பிக்கை மக்களிடம் உள்ளது.

இக்கோவிலில் ஆண்டுதோறும் ஆவணி மாதம் நடக்கும் சூரிய பூஜையில் காலை சூரிய உதயத்தில் தொடங்கி சூரிய ஒளியானது கோவிலின் முன் மண்டபம் வழியாக படிப்படியாக நகர்ந்து கருவறையில் உள்ள மூலவர் சிலையின் நெற்றிப்பொட்டில் திலகமிட்டது போல் ஜொலிக்கும். நேற்று காலை துவங்கிய சூரிய பூஜை தொடர்ந்து அடுத்த மூன்று நாட்கள் வரை நடைபெற உள்ளது.

இன்று துவங்கிய சூரிய பூஜையில் பெருந்திரளான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபட்டுச் சென்றனர். காவிரி கரைகளில் உள்ள ஒரு சில ஆலயங்களில் மட்டுமே இந்த காணக்கிடைக்காத காட்சிகள் கிடைக்கின்றது என்பது குறிப்பிடதக்கது.

திருச்சி மெயில் செய்திகளை உடனுக்குடன் அறிய…https://chat.whatsapp.com/ElwJ6Sxx3w58HlHTxk97fo

Leave A Reply

Your email address will not be published.